கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்
கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்
25 February 2011
பட்டுப்புடவை, மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை
Posted by Gunalan Lavanyan
7:27 AM, under பேட்டி | No comments
’ஐயய்யோ பிடிச்சிருக்கு’ என்ற தன் பாட்டின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மஹதி, சினிமா, கர்நாடக இசை மேடை ஆகிய இரண்டிலும் பிசியாக இருக்கிறார். சங்கீதக் குடும்பத்தைச் சேர்ந்த மஹதியை சந்தித்தபோது நல்ல மழை. ‘மஹதி அகாடமி ஆஃப் மியூஸிக் அண்ட் டான்ஸ்’ பள்ளியில் நடந்தது இந்த மழை நாள் சந்திப்பு.
‘‘நாங்க இசைக் குடும்பம். அப்பா – திருவையாறு சேகர். பாடகர்; இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யர். அம்மா, புல்லாங்குழல் வித்வான் வசந்தி. புல்லாங்குழல் வித்வம்சினி திருமதி கேசியின் சிஷ்யை. அப்பா, அம்மா சேர்ந்துதான் இந்த அகாடமியை நடத்திட்டு இருக்காங்க. இது ஆரம்பிச்சு ஏழு வருஷம் ஆகுது. இங்கே, 600 ஸ்டூடன்ட்ஸுக்கு மேலே மியூஸிக் கத்துக்குறாங்க. பாட்டு, வீணை, வயலின், கிடார், ஃப்ளூட், மிருதங்கம்னு எல்லாமே சொல்லித் தர்றாங்க. என் பெயர்லே அகாடமி நடக்கிறதாலே அப்பப்போ ஸ்கூல்லே என்ன நடக்குதுன்னு அம்மாகிட்டே தகவல் கேட்டுப்பேன். மத்தபடி எல்லாத்தையும் அப்பா – அம்மாதான் கவனிச்சிக்கிறாங்க. நான் கச்சேரி, ரெக்கார்டிங்னு பிஸி ஷெட்யூல்லே இருப்பேன்.
இதோ ‘வந்தேன்... வந்தேன்’னு டிசம்பர் வந்துடுச்சு. மியூஸிக் ஃபெஸ்டிவெல் தொடங்கப்போகுது. அந்த மூடுலே இருக்கேன். அதே மூடுலே இருந்தாகணும். அப்பதான் எனக்கு ஃபெஸ்டிவெல் நல்லா போகும். என் கச்சேரிகள் நல்லா நடக்கணும்னா, யூஸிக் தவிர, மத்த எல்லாத்தையும் நான் மறந்தாகணும். சில நேரங்கள்லே டிசம்பர் சீஸன்லே நிறைய ரெக்கார்டிங்கும் வந்துடும். அதுக்கும் போயாகணும். டைம் மேனேஜ்மென்ட் தெரிஞ்சிருக்கிறது இதையெல்லாம் சமாளிக்க ரொம்ப சௌகரியமா இருக்கு. அந்த மாதிரி சமயங்கள்லே அம்மா, அப்பாவைக்கூடக் கண்டுக்கமாட்டேன். ஆனா, அவங்க எனக்கு உதவியா இருப்பாங்க. இப்ப கணவர் வ ந் து ட் டா ர் . அவ ரு ம் அப்பா, அம்மா மாதிரியே இருக்கார். வாழ்க்கை ரொம்ப ச ந் தோஷமா அமைஞ்சிருக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் சீஸன்லே பதினஞ்சு கச்சேரியாவது பண்ணுவேன். போனவருஷம் பாடுன கீர்த்தனைகளை இந்த வருஷம் பாடமாட்டேன். சீஸன்லே ஒவ்வொரு கச்சேரிக்கும் வெவ்வேறு கீர்த்தனைகளை பி ரி ப் பே ர் ப ண் ணி வெச்சுக்குவேன். ராகத்துலே பு து சா கண்டு பி டி க் க எதுவும் இல்லே! அதனாலே, அபூர்வ ராகங்களாப் பார்த்து செலக்ட் பண்ணி வெச்சிருப்பேன். என்னோட கச்சேரியிலே எட்டு, ஒண்பது அயிட்டமாவது இருக்கும். இதையெல்லாம் ஒரு ரூலாவே கடைப்பிடிக்கிறேன். இந்த ரூல்ஸ்படிதான் இந்த சீஸனையும் தொடங்கப் போறேன். ஆனா, இந்த வருஷம் என்னோட ஒரு கச்சேரியிலே டபுள் ராகா - பல்லவி பாடுறதுக்கு ஸ்பெஷல் பிரிபரேஷன்ஸ் பண்ணி வெச்சிருக்கேன். அதேமாதிரி தமிழ்க் கீர்த்தனைகளையும் நிறைய பாடப்போறேன். அம்மாவும் நிறைய ஐடியாஸ் கொடுத்துருக்காங்க. அதையும் எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.
எப்பவும் சீஸன் ஆடியன்ஸ், எல்லா கச்சேரிக்கும் வருவாங்க. அதனாலே ஒவ்வொரு கச்சேரியும் வித்தியாசமாவும் புதுசாவும் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அதை நிறைவேத்துறது கச்சேரி செய்றவங்களோட கடமை. என் கடமையை நான் எப்பவும் சரியா செய்ய முயற்சி பண்றேன். அதுக்கு என்னோட ரோல் மாடலா இருக்கிற குரு, மதுரை டி.என். சேஷகோபாலன் அவர்களும் ஒரு காரணம். அதேமாதிரி கேரளாவில் இருக்கிற குரு, மங்காட்டு நடேசன் அவர்களும். இவங்க, என் இசைப் பயணத்துக்கு கிடைத்த நல்ல வழிகாட்டிகள்! (மஹதியின் முதல் குரு அவருடைய மாதாவும்
பிதாவும்தான்.)
சீஸன்லே மியூஸிக் பிரிபரேஷன் எப்படியோ, அப்படிதான் என் காஸ்ட்யூமும்! டிசம்பர்னா பட்டு நிச்சயம் உண்டு. மத்த சேலைகளுக்கு இப்ப வேலையே இல்லை. பட்டுப் புடவையோடு மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை அவசியம்
இருக்கணும். இருக்கிற மாதிரி பார்த்துப்பேன். போன வருஷம் கட்டுன சேலையை இந்த வருஷம் கட்டமாட்டேன். இந்த வருஷம் கட்டுன சேலை அடுத்த வருஷம், நோ சான்ஸ். இதையெல்லாம் வியூவர்ஸ் (பெண்கள்) கண்கொட்டாமே கவனிக்கிறாங்க! அதனாலே சீஸனுக்கு பிரிப்பேர் ஆகும்போது சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கு.
இன்னொரு முக்கியமான ச ங் கதி! ச ங் கீ த சீஸன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சாரீரத்தை கவனிச்சுக்கணும். என்னோடது சென்சிடிவான வாய்ஸ்ங்கிறதாலே யார் கிட்டேயும் அநாவசியமா பேசமாட்டேன். வாய்ஸ் ரெஸ்ட் கொடுப்பேன். போன்லேயும் அதிகமா பேசமாட்டேன். மேக்ஸிமம் எஸ்.எம்.எஸ்.தான்! அதே நேரத்துலே சரீரத்துக்கும் எதுவும் வந்துடக் கூடாது. அதனாலே ஹாட் வாட்டர், ட ய ட்னு இ ரு ப்பேன். ‘சங்கீதத்துக்கு சாரீரமும் மு க் கி ய ம் , ச ரீ ர மு ம் முக்கியம்’னு அப்பா சொல்லுவாங்க. அதை எப்பவும் ஃபாலோ பண்றேன். (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!)
இப்ப இருக்கிறமாதிரி நான் பாட வரும்போது நிறைய வாய்ப்புகள் இல்லை. எங்காச்சும் ஒண்ணு, ரெண்டு வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது டி.வி. சானல்லே மியூசிக் புரோக்ராம் பண்ணுவாங்க. அந்த புரோக்ராம்லே கலந்துக்க ரொம்ப பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். சில நேரங்கள்லே என்னதான் திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கும். ஆனா, இப்ப அப்படி இல்லே! (காலம் மாறிப்போச்சு!) திறமை வெளியே வர்றதுக்கு நிறைய வழி இருக்கு. ஒவ்வொரு சீஸனுக்கும் புதுசு புதுசா ஆர்டிஸ்ட் வர்றாங்க. பத்து, பன்னிரெண்டு வயசுலேயே ரொம்ப ஃபேமஸ் ஆயிடுறாங்க. விஜய் டி.வி. மாதிரி நிறை சானல்ஸ் அவங்களுக்கு ‘ஏர் டெல் சூப்பர் சிங்கர்’ மாதிரி புரோக்ராம்லே வாய்ப்பு கொடுக்கறாங்க. அவங்களே வீடு தேடி வந்து அழைச்சிட்டு போறாங்க. கூடவே கிஃப்ட், சினிமா சான்ஸ்னு நிறைய கிடைக்குது.
இந்தமாதிரி நேரத்துலே இவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப கடுமையா உழைக் கணும். வெற்றி கிடைச்சிடுச்சுங்கிறதாலே இதுவே முடிவுன்னு நினைச்சிடக்கூடாது. இதைவிட சாதிக்க இன்னும் நிறைய இருக்குங்கிற உண்மையை தெரிஞ்சுக்கணும். இந்த நேரத்துலே குருவோட வழிகாட்டுதல்படி நடக்குறது ரொம்ப முக்கியம்.
இன்னும் முக்கியமான விஷயம், கர்வம் வெச்சிக்கக் கூடாது. இதெல்லாம் என் அப்பா சொல்லிக் கொடுத்த பாடம். இதை என் ஜூனியர்ஸுக்கு சொல்றது என் கடமை. அதனாலே, கர்வம் வேணாம், புகழுக்கு மயங்கவேணாம், குரு பக்தி தேவை. இதெல்லாம் இருந்தா இன்னும் இன்னும் சாதிக்க முடியும். இசைச் சிகரத்தை அடையமுடியும்.’’
- சா.இலாகுபாரதி
நம் தோழி, டிசம்பர் 2010
15 November 2010
13 November 2010
07 November 2010
சர்வதேச திரைப்பட விழா
Posted by Gunalan Lavanyan
5:14 PM, under சினிமா | No comments
![]() |
| சர்வதேச திரைப்பட விழா அறிமுகக் கூட்டத்தில்... |
காலம் காலமாக கோவாவில் நடத்தப்பட்டு வரும் உலகத் திரைப்பட விழாவைப் போல மிகப்பெரிய அளவில் நடத்த தமிழ்த் திரையுலகினர் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திரைத் துறையினர் செய்து வருகிறார்கள். இந்த விழா டிசம்பவர் 15-லிருந்து 23 வரை 9 நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றன.
இந்தத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு தனது பங்காக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு இருக்கிறது. இயக்குனர் மணிரத்னமும் தனது பங்காக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். இருப்பினும் விழாவுக்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்காது என்றும், இன்னும் நிதி திரட்ட வேண்டும் என்றும் இந்த விழா தொடர்பான கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். முதல்வரை நேரில் சந்தித்து கூடுதல் நிதி கேட்கும் யோசனை இருப்பதாகவும் விழாக்குழு தெரிவித்து இருக்கிறது.
நிறைவு விழாவில் இரண்டு படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக இரண்டு லட்சமும், இரண்டாவது பரிசாக ஒன்றரை லட்சமும் வழங்கப்பட இருக்கிறதாம். இந்த விழாவில் உலக அளவில் புகழ் பெற்ற 7 திரைப்பட இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் உள்ள உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது.
26 October 2010
24 April 2010
கண்டுகொள்ளுமா தமிழக அரசு...?
Posted by Gunalan Lavanyan
4:10 PM, under பாப்கார்ன் | 3 comments
(காட்சியில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள்... டிசைன்ஸ் பற்றி ஒரு புத்தகம் இருந்தது. 1800களிலேயே டிசைன்ஸ் பற்றி வெளிவந்திருக்கிற புத்தகம் அது படம் -3,4)
சென்னை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 1608-ம் ஆண்டில் வெளியான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் வரலாறு, திருவாங்கூர் சமஸ்தான வரலாறு, சென்னை மாகாண கணக்கு வழக்கு நூல், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், செடிகள் பற்றிய அரிய வகைப் புத்தகங்கள் என்று வேறெங்கும் கிடைத்திராதப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் புத்தகங்களை யாரும் பயன்படுத்த முடியாது. ஆய்வுக்கும் உபயோகப்படுத்த முடியாது. காரணம், ஸ்கேன் செய்யப்பட்டோ, லேமினேஷன் செய்யப்பட்டோ புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கவில்லை. வெளியான ஆண்டில் எப்படி வெளியிடப்பட்டதோ அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆனால், நிறைய நூல்கள் அக்கு அக்காக வருகின்றன. அதனால், சில நூல்களை கையால் கூடத் தொட அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர்களைச் சொல்லி என்ன குற்றம். புத்தகங்கள் அந்த அளவுக்கு சிதிலமடைந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், நூலகப் பணியாளர்களிடம் கேட்கும்போது அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கேன் செய்தால் நூல் மேலும் சிதிலமாகும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். வளர்ந்துவரும் நவீன அறிவியல் உலகில் புத்தகங்களை லேமினேன் செய்தோ, ஸ்கேன் செய்தோ பாதுகாப்பதற்கெல்லாம் வழிவகைகள், வாய்ப்புகள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன. அல்லது சில நவீன உத்திகளை வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியும் செய்ய முடியும். அரசாங்கத்தால் முடியாததுதான் என்ன? அதைச் செய்யுமா இந்த அரசு? உங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்து, இந்தச் செய்தியை பிரபலமாக்கி அரசின் கவனத்தை ஈர்க்க உதவலாமே! இதைவிட வேறென்ன செய்யப்போகிறோம் அடுத்தத் தலைமுறைக்கு... வாக்களியுங்கள் நண்பர்களே... உங்கள் கருத்துரைகளை பின்னூட்டம் இடுங்கள். முடிந்தால் கன்னிமரா செல்லுங்கள். சந்திப்போம்.
23 April 2010
காதல் ரசம்
Posted by Gunalan Lavanyan
7:38 AM, under கவிதை | No comments
உனக்காக எதையும் செய்வேன் என்று
பொய்சொல்லப் போவதில்லை...
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்கிறேன்!
அவள் திராட்சை கண்களில் இருந்து
காதல் ரசம் வழிந்துகொண்டு இருக்கிறது...
பீப்பாய் நிறைய பருகிவிட்டேன்.
தீரவில்லை தாகம்!
இருசக்கர வாகனத்தில் போகும்போது
பின்னால் வரும் தேவதைகளை
கண்ணாடியில் பார்ப்பது மாதிரி
நடந்துபோகும்போதும்
தேவதைகளைக் கடந்துபோகையில்
பார்ப்பதற்கு ஒரு சைடு மிர்ரர் கேட்கிறது
மனசு!
நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ என்னைப் பார்க்காமல் இருப்பது மாதிரி
நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம்
உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்னால்!
ஒற்றைக் காலில் நின்று
மீன் கொத்திப் போகும்
கொக்கைப் போல
ஒற்றைக் கண்ணில் பார்த்து
என் இதயம் கொத்திப் போகும்
கொக்கு அவள்!
ஆடும்போது தோகை விரித்து
மயில் ஆடுவதைப் போல
போகும்போது கூந்தல் விரித்துப் போகும்
அவளும் ஒரு மயில்!
பொய்சொல்லப் போவதில்லை...
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்கிறேன்!
அவள் திராட்சை கண்களில் இருந்து
காதல் ரசம் வழிந்துகொண்டு இருக்கிறது...
பீப்பாய் நிறைய பருகிவிட்டேன்.
தீரவில்லை தாகம்!
இருசக்கர வாகனத்தில் போகும்போது
பின்னால் வரும் தேவதைகளை
கண்ணாடியில் பார்ப்பது மாதிரி
நடந்துபோகும்போதும்
தேவதைகளைக் கடந்துபோகையில்
பார்ப்பதற்கு ஒரு சைடு மிர்ரர் கேட்கிறது
மனசு!
நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ என்னைப் பார்க்காமல் இருப்பது மாதிரி
நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம்
உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்னால்!
ஒற்றைக் காலில் நின்று
மீன் கொத்திப் போகும்
கொக்கைப் போல
ஒற்றைக் கண்ணில் பார்த்து
என் இதயம் கொத்திப் போகும்
கொக்கு அவள்!
ஆடும்போது தோகை விரித்து
மயில் ஆடுவதைப் போல
போகும்போது கூந்தல் விரித்துப் போகும்
அவளும் ஒரு மயில்!



































