கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்
கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
05 April 2011
கிசுகிசு: நயன்தாரா - பிரபுதேவா திருமணம்
Posted by Gunalan Lavanyan
10:40 PM, under சினிமா | No comments
இரண்டாவது திருமணத்துக்கு பிரபுதேவாவும், இரண்டாவது காதலுக்கு நயன்தாராவும் தயாரானதில் இருந்தே சினிமா வட்டாரத்தில் இவர்கள் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் இந்த கிசுகிசு ஜோடி மும்பையில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறது. எங்கேயும் காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கும் பிரபுதேவா, இந்தப் படம் வெளியானதும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முதல் காதல் மனைவி ரமலத்துடனான விவாகரத்து ஜூன் மாதம் கிடைக்கலாம் என்பதால், அந்த இனிப்புச் செய்தி (பிரபுவுக்கும் நயனுக்கும்தான்) வந்தவுடன் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் நயன்தாராவை பிரபுதேவா திருமணம் செய்யலாம் என்று தெரிகிறது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது காதல் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜின் ஆலோசனைப்படியே, மும்பையில் திருமணம் நடக்க யிருப்பதாகக் கூறப்படுகிறது.
நயன்தாராவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று பிரபுதேவாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, என் குடும்ப விஷயங்களை பத்திரிகைகள் மூலம் வெளிச்சம் போட விரும்பவில்லை, என்று பதில் அளித்தாராம்! ஹி... ஹி...
07 November 2010
சர்வதேச திரைப்பட விழா
Posted by Gunalan Lavanyan
5:14 PM, under சினிமா | No comments
![]() |
| சர்வதேச திரைப்பட விழா அறிமுகக் கூட்டத்தில்... |
காலம் காலமாக கோவாவில் நடத்தப்பட்டு வரும் உலகத் திரைப்பட விழாவைப் போல மிகப்பெரிய அளவில் நடத்த தமிழ்த் திரையுலகினர் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திரைத் துறையினர் செய்து வருகிறார்கள். இந்த விழா டிசம்பவர் 15-லிருந்து 23 வரை 9 நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றன.
இந்தத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு தனது பங்காக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு இருக்கிறது. இயக்குனர் மணிரத்னமும் தனது பங்காக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். இருப்பினும் விழாவுக்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்காது என்றும், இன்னும் நிதி திரட்ட வேண்டும் என்றும் இந்த விழா தொடர்பான கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். முதல்வரை நேரில் சந்தித்து கூடுதல் நிதி கேட்கும் யோசனை இருப்பதாகவும் விழாக்குழு தெரிவித்து இருக்கிறது.
நிறைவு விழாவில் இரண்டு படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக இரண்டு லட்சமும், இரண்டாவது பரிசாக ஒன்றரை லட்சமும் வழங்கப்பட இருக்கிறதாம். இந்த விழாவில் உலக அளவில் புகழ் பெற்ற 7 திரைப்பட இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் உள்ள உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது.
07 February 2010
இனி இலவசமாக சினிமா பார்க்கலாம்!
Posted by Gunalan Lavanyan
4:42 AM, under சினிமா | No comments
உலகத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களை தமிழகமெங்கும் மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டிவரும் அமைப்பு 'நிழல்கள்'. இதன் அமைப்பாளர் திரு ப.திருநாவுக்கரசு.
இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், 'சென்னையில் அவ்வளவாக திரையிடல்கள் நடத்த முடியவில்லை. அதற்கு இடப்பற்றாக் குறைதான் காரணம்' என்று 'டிஸ்கவரி புக்பேலஸில்' சனி (5.2.2010) அன்று நடைபெற்ற திரையிடலின்போது திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.
சென்னை - கே.கே.நகரில் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் உள்ளது டிஸ்கவரி புக்பேலஸ். திரைப்பட உதவி இயக்குநனுரும், இலக்கிய வாசகரும், சிறுகதை எழுத்தாளருமான கயிலை மு.வேடியப்பன் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகிறார். சற்று பெரிய இடவசதியோடு அமைந்துள்ள இந்தப் புத்தகக் கடையில்... சினிமா திரையிடல்கள், புத்தக வெளியீடுகள், நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டங்களை இலவசமாக நடத்திக்கொள்ள அவர் அனுமதி வழங்குகிறார் வேடியப்பன்.
'அந்தவகையில், இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தோறும் நிழல்கள் அமைப்பு சார்பாக டிஸ்கவரி புக்பேலஸில் திரையிடல்கள் நடைபெறும்' என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு படம் திரைடலுக்கு முன்பும், பின்பும் அந்த படம் குறித்த அறிமுகத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நிழல் அமைப்பு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. திரைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களும் இந்தத் திரையிடலில் பங்கேற்று சினிமா மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், திரைப்பட உருவாக்கம் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இது வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
அடுத்தமாதம் மாதம் முதல் இந்தத் திரையிடலில் திரைப்பட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
முதல் சனிக்கிழமை
நேற்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்துக்கான திரையிடலின்போது... தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசு விருதுகளைப் பெற்ற 'கர்ண மோட்சம்' குறும்படமும், எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' சிறுகதையை வைத்து எடுக்கப்பட்ட 'நடந்த கதை' குறும்படமும் திரையிடப்பட்டன. (நடந்த கதை இதுவரைக்கும் ஐந்து அமைப்புகளிலிருந்து விருது பெற்றுள்ளது.) மேலும் சில உலகப் படங்களும் திரையிடப்பட்டன. விழாவில் முதல் இரண்டு படங்களின் இயக்குநர்கள் முறையே முரளி மனோகர் மற்றும் பொன்.சுதா பங்கேற்று படம் எடுக்கும்போது ஏற்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
அழிந்து வரும் தெருக்கூத்துக் கலையைப் பற்றிய படம். மிக மெல்லிய குரலில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட கதை. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். விமர்சனுக்கு உட்படுத்தக் கூடாத படம். இயக்குநனை அப்ரிஷியேட் செய்ய வேண்டும். கமர்ஷியல் சினிமாவுக்கு போனாலும் இது போன்ற மக்கள் படங்களையே எடுக்கவேண்டும் என்று முரளி மனோகருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
அழகிய பெரியவன் கதை. கதை சொல்லியாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் அறிவுமதி. எங்கள் ஊர் (பேரணாம்பட்டு) சுற்றி கதை பின்னலோடு எடுக்கப்பட்ட படம். மட்டுமின்றி தலித் மக்கள் படும் வேதனையை ஆதிக்க சாதியினர் செய்யும் கொடுமையை தோலுரித்து காட்டக்கூடிய படம். ஆதிக்க சாதியினர் பார்க்கவேண்டிய படம். தலித் நண்பர்கள் இந்தப் படத்தை பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள். சமூகத்தில் உள்ள அவலங்களை எதிர்த்து போராட ஊக்கமளிக்கும் கதை.
21 January 2010
சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!
ஐனாக்ஸ் – மயிலாப்பூர்
(சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!)
இந்தியாவிலேயே மிக அதிகமான திரைகளைக் கொண்ட நிறுவனம் ஐனாக்ஸ் லீஸுர் லிமிடெட் (Inox leisure ltd). இந்தியா முழுக்க 19 நகரங்களில் 101 திரைகளை ஐனாக்ஸ் கொண்டிருக்கிறது. மிக அதிகமான ஐனாக்ஸ் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களில்தான் இருக்கின்றன. சென்னையிலும் சிட்டி சென்டர் ஷாப்பிங் மாலில்தான் ஐனாக்ஸ் இருக்கிறது. மொத்தம் நான்கு ஸ்க்ரீன்கள். முக்கியமான எல்லா மொழிப் படங்களும் காட்சியிடப்படுகின்றன.
ஐனாக்ஸில் பிலிம் சுருள்களின் மூலம்தான் படங்கள் திரையிடப்படுகின்றன. டிஜிட்டல் முறையைவிட பிலிமில் ஓடும் படங்கள்தான் கிளாரிட்டியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் கூறுகிறது. பிலிம் மூலம் படம் திரையிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு செலவு சற்று அதிகம் என்றாலும், பார்வையாளர்களுக்கு துல்லியமான காட்சியை இதனால் தரமுடிகிறது என்று கூறுகிறார் சென்னையின் பொது மேலாளர் விவேக் வெட்டாத் (Vivek vettath). தவிர துல்லியமான ஒலி எழுப்பும் DDs சவுன்ட் எஃபெக்ட்ஸ் இங்கு உள்ளது.
லாபியிலிருந்து தியேட்டர் வரை முழுக்க கார்பெட், ஏசி. ஐனாக்ஸுக்கே சொந்தமான கான்டீன் என்று உயர்தரமான ஒரு தியேட்டராக ஐனாக்ஸ் திகழ்கிறது.
ஐனாக்ஸ் பிட்ஸ்
- ஐனாக்ஸ் வருபவர்கள், சிட்டி சென்டரில் ஃபுட் கோர்ட், லேன்ட்மார்க், வியர்ஸ் ஷாப்பிங் என்று போகும் வசதி.
- தியேட்டருக்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
- அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கிரிஸ்ட்டி புரொஜக்டர்தான் மூலம்தான் இங்கு படங்கள் திரையிடப்படுகின்றன.
- சர்வதேச ஆலோசகர்களின் பரிதுரைப்படி அமைக்கப்பட்ட ஆடிடோ ரியம்.
- நான்கு தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் மொத்தம் 900-க்கும் அதிகமானவர்கள் அமர்ந்து படம் பார்க்க முடியும்.
- வென்டர் டிக்கெட் புக்கிங் வசதி இந்தியாவிலேயே ஐனாக்ஸில் மட்டுமே இருக்கிறது. தவிர ஆன்லைன் புக்கிங், டிக்கெட் ஹோம் டெலிவரி வசதியும் இருக்கிறது.
டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.120
- சா.இலாகுபாரதி
சென்னைக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட்!
Posted by Gunalan Lavanyan
8:09 AM, under சினிமா | 2 comments
மாயாஜால் - கிழக்கு கடற்கரைச் சாலை
திருவான்மியூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கத்திய பாணியில் பல வசதிகளுடன் கூடிய முதல் திரையரங்கம்; 10 ஸ்க்ரீன்கள். எந்த நேரத்திலும் படம் பார்க்கக்கூடிய வசதி. டிஜிட்டல் கியூப் டெக்னாலஜியில் திரையிடப்படும் படங்கள். டிடிஎஸ் சவுன்ட் சிஸ்டம். ஸ்டெப்ஸ் டைப்பில் வசதியான இருக்கைகள் என்று நவீன ‘மாயலோகம்’தான் மாயாஜால்.
தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என மக்கள் அதிகமாகப் பார்க்கிற மொழிப் படங்கள் ஸ்க்ரீன் செய்யப்படுகின்றன. இந்தியாவில் முதன்முறையாக போனிலேயே டிக்கெட் புக் செய்யும் வசதி இங்கிருக்கிறது. இது மொபைல் கஸ்டமர் கேருக்கு கால் செய்வதுபோல மிகச் சுலபம். 044-43436565 என்ற நம்பரை டையல் செய்தால் கம்யூட்டரில் பதிவுசெய்யப்பட்ட குரல் டிக்கெட் புக்கிங்குக்கு வழிசொல்லும். தவிர, ஆன்லைன் புங்கிங், ஹோம் டெலிவரி வசதியும் உண்டு.
ஸ்க்ரீனிங்ஸ், ப்ளேயிங்ஸ், ஷாப்பிங்ஸ், ஈட்டிங்ஸ், ஸ்விம்மிங்ஸ், டிரிங்கிங்ஸ், ஸ்லீப்பிங்ஸ் என்று வாழ்க்கையைக் கொண்டாட நினைப்பவர்களுக்கு இவை அத்தனையும் இங்கு உண்டு. சுருக்கமாக ஒரு சொர்க்கபுரிதான் மாயாஜால்.
நாள்முழுக்க இங்கேயே செலவழிக்கும் அளவுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள். இன்டோர் கேம்ஸ், கிரிக்கெட் கிரவுன்ட், ஷூட்டிங் ஸ்பாட், ரிசார்ட் என்று
27 ஏக்கரில் ஒரு வளர்ந்த நவீன கிராமம். 1500 கார்கள் வரை பார்க்கிங் செய்யும் வசதி.
செட்டிநாடு முதல் சைனீஸ் புட்ஸ் வரை எல்லா வகையான உணவும் கிடைக்கும் புட்கோர்ட்டும் இருக்கிறது. சென்னைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட்.
மாயாஜால் பிட்ஸ்
- கமல் நடித்த ‘தசாவதாரம்’ படம் தினமும் 48 காட்சிகள் மாயாஜாலில் திரையிடப்பட்டிருக்கிறது.
- எந்திரன் படத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப் பட்டிருக்கின்றன.
- சர்வதேச அளவில் விளையாடப்படும் ‘பெயின்ட்பால்’ கேம் இங்கு ஸ்பெஷல்.
- 100க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.
- மாயாஜால் ரிசார்ட்டில் உள்ள பாருக்குள் நுழைந்தால் காட்டிற்குள் நுழைந்த ஒரு ஃபீலிங்கோடு மது அருந்த முடியும்.
- வீட்டுக்குத் தேவையான ஹவுஸ் ஹோல்ட் திங்க்ஸும் இங்கு பர்ச்சேஸ் செய்யலாம்.
டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.120
20 January 2010
இதய நோயாளிகள் இதைப் படிக்கவேண்டாம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!
அபிராமி மெகா மால் – புரசைவாக்கம்
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அபிராமி மாலில்தான் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சீட்டிலிருந்தே பட்டன் அழுத்தினால், தேடி வந்து ஸ்னாக்ஸ், டிரிங்க்ஸ் ஆர்டர் எடுப்பார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் டிஜிட்டல் புரொஜக்ஷன் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 4 தியேட்டர்கள். இதில் ஸ்ரீ அன்னை அபிராமி, சீன கலாசார பாரம்பரியத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழைந்தாள் முழுக்கமுழுக்க சீனாவிலேயே படம் பார்க்கும் மனநிலை வந்துவிடும். இதேபோல் சொர்ண சக்தி, எகிப்திய பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்ட திரையரங்கம். இப்படி கலாசார முறைப்படி தியேட்டர் அமைக்கப்பட்டு இருப்பது இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறை. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காருக்கு லிஃப்ட். இப்படி நிறைய முதன்முறை சிறப்புகள் அபிராமியில் உண்டு.
மாலுக்கு ஷாப்பிங் வருபவர்கள் படம் பார்க்கலாம். படம் பார்க்க வருபவர்கள் ஷாப்பிங் செய்யலாம். இங்கு உள்ள ஃபுட் கோர்ட்டில் எல்லாவித உணவுகளும் கிடைக்கும். கிஸ்ஸிங் கார்; கிட்ஸ் வேர்ல்ட், ஃபிஷ் வேர்ல்ட், ஸ்னோ வேர்ல்ட் என அல்டிமேட் என்டர்டெய்ன்மென்ட் இங்கு உண்டு. மெகா ஸ்னோ வேர்ல்டில் நுழைந்தால் இடி, மின்னல், புயல், ஐஸ் மழை என குளிர் பிரதேசங்களில் மட்டுமே ஏற்படும் அபூர்வக் காட்சிகளைப் பார்க்கமுடியும். ப்யூரிஃபை செய்யப்பட்ட மினரல் வாட்டரால் தயாரிக்கப்பட்ட ஐஸ் வேர்ல்ட் இந்த ஸ்னோ வேர்ல்ட். இந்த ஐஸை சாப்பிடவும் செய்யலாம். அவ்வளவு சுத்தம்.
மெகா மாலின் மற்றுமொரு ஸ்பெஷல் Horror House இது திட்டமிடப்பட்ட திகில் வீடு. குழந்தைகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் இந்தப் பேய் வீட்டுக்குள் அனுமதி இல்லை. உள்ளே போய் வருபவர்கள் பேய் அறைந்த மாதிரிதான் வெளியே திரும்புவார்கள். அவ்வளவு திகில். உண்மையைப் போல அமைக்கப்பட்ட பொய்தான் இந்த Horror House. சாகஸக்காரர்களுக்கு சரியான இடம்.
அபிராமியில் இன்னொரு ஸ்பெஷல், 4D தியேட்டர். 2D, 3D கேள்விப்பட்டு இருக்கிறேன். அது என்ன 4D என்கிறீர்களா? இந்தத் தியேட்டரில் திரையிடப்படும் படங்கள் மொத்தம் 18 நிமிடங்கள்தான் ஓடும். படத்தில் ஹீரோ வில்லனை
ஒரு குத்து விட்டால் படம் பார்க்கும் நமக்கும் குத்து விழும். அழகான தேவதை ஒருத்தி ஜாஸ்மீன் சென்ட் அடித்துக்கொண்டால் நம்முடைய மூக்கை மல்லிகை வாசனை துளைக்கும். படத்தில் மழை வந்தால் நாம் நனைந்துவிடுவோம். இதுதான் 4D. இந்தப் படங்களை இஸ்ரேலிலிருந்து வரவழைக்கிறோம் என்கிறார் தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.
அபிராமி மெகா மால் பிட்ஸ்
- நுழைவாயில் முதல் டாய்லெட் வரை எங்கு திரும்பினாலும் ஏசி மயம். சென்டர்லைஸ்டு செய்யப்பட்ட ஏசி.
- அபிராமியில் இரண்டு தியேட்டர்கள் 5 ஸ்டார் வசதிகள் கொண்டது.
- இந்தியாவிலேயே முதன்முறையாக (1992-ல்) ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அறிமுகப்படுத்தப்பட்ட தியேட்டர்.
- மால் முழுக்க சுற்றிப்பார்க்கவும் சாப்பிடவும் பேக்கேஜ் வசதி இருக்கிறது.
- அபிராமி தியேட்டர் ஆரம்பித்த 33 வருடங்களில், திரையிடப்பட்ட படங்களில் 240 படங்கள் 100 நாட்களைக் கடந்து வெற்றிபெற்ற படங்கள்.
டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.70, ரூ.90, ரூ.120
‘உம்மா உம்மம்மா’வுக்கு ஜாலி!
Posted by Gunalan Lavanyan
6:01 AM, under சினிமா | No comments
சத்தியம் காம்ப்ளெக்ஸ் – ராயப்பேட்டை
தியேட்டருக்குள் நுழைந்தால் ஸ்டார் ஹோட்டலில் கால் வைப்பதுபோல் பிரமிப்பு. ‘குளுகுளு’ சென்டர்லைஸ்ட் ஏசியோடு, திரும்பிய பக்கமெல்லாம் எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் அப்டேட்டாகும் சினிமா விளம்பரம். டாய்லெட்டில்கூட சின்னச் சின்ன டிஸ்ப்ளேஸ். இப்படி விளம்பரத்திலும் பல புதுமைகளைக் கையாள்கிற சத்தியம், நவீன வசதிகளோடு இயங்கும் இந்தியாவின் முன்னணி திரையரங்கம்.
சென்னையின் பிரதான இடமான அண்ணா சாலையிலிருந்து மிக அருகாமையில் இருப்பது தியேட்டரின் ப்ளஸ். இது ஒரு மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பது கூடுதல் சிறப்பு. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோ லிவுட் என்று எல்லா மொழிப் படங்களும் ரிலீஸாகும் அதே தினத்திலேயே திரையிடப்படுவது அடிஷனல் ப்ளஸ்.
சத்தியமில் உள்ள 6 தியேட்டர்களும் ஃப்லிம் சுருள் இல்லாமல், 2D டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. இங்கு 3D-Rdx அனிமேஷன் படங்கள் திரையிடக்கூடிய அளவில் நவீன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சவுண்ட் எஃபெக்ட்ஸில் DDsஸைவிட அட்வான்ஸ் டெக்னாலஜியை சத்தியம் கையாள்கிறது.
சத்தியமில் டிக்கெட்டுக்காக கியூவில் நிற்கவேண்டிய அவசியமே இல்லை. ஆன்லைன் புக்கிங், போன் புக்கிங் மூலம் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்யமுடியும். எந்த சீட் வேண்டும் என்பதைக்கூட ஆன்லைனில் தீர்மானிக்கமுடியும். அப்படியே சூடாக ஸ்னாக்ஸ், ஹாட் டிரிங்ஸ், ஜில்லென்று கூல்டிரிங்ஸ்கூட ஆன்லைனில் ஆடர் செய்யலாம். படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது இவையெல்லாம் இருக்கையைத் தேடி வந்துவிடுவது கதையைவிட்டு வெளியே போகாமல் இருக்க பார்வையாளர்களுக்கு சூப்பர் சாய்ஸ்.
தியேட்டருக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் போகலாம். படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே போனால்கூட கவலையில்லை. அந்த ஒருமணி நேரத்தை விளையாடியே கழிக்கலாம். ஆமாம்! ‘ப்ளர்’ என்ற கேமிங் இங்கு உண்டு. இதில், ஸ்னோ பவுலிங், இன்டர்னெட் கேம்ஸ், வீடியோ கேம்ஸ், கார் ரேஸ், ஷூட்டிங் என்று குட்டீஸ் முதல் தாத்தாஸ் வரை யாரும் விளையாடலாம். குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக ‘மேஜிக் ஹேட்’. உம்மா குழந்தை, உம்மம்மா குழைந்தைக்கெல்லாம் இது ஜாலி டைம்பாஸ்.
விளையாடிவிட்டு அசதியாக இருந்தால் ‘எக்ஸ்டஸி’க்கோ ‘ப்ளர் கஃபே’வுக்கோ போய் சாக்லேட், ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ், டிஃபன் என்று எதையாவது வயிறு முட்டத் மேய்ந்துவிட்டு ஹாயாக சினிமா போகலாம்.
இனி, பொழுதுபோகவில்லை என்று யாராவது சொல்லமுடியுமா?
சத்தியம் பிட்ஸ்
- ‘S’ - விளம்பரங்களுடன் வெளிவரும் சத்தியமின் இலவச மேகஸின்.
- இலவச பார்க்கிங் வசதி இங்கு உண்டு.
- விரைவில் ஏழாவது ஸ்க்ரீன் வரப்போகிறது.
- சினிமா ரசிகர்களுக்காகவே டெபிட் கார்ட் மாதிரி fuel card.
- ப்ளரிலும் கேமிங்குக்கு தனி ரீசார்ஜ் கார்ட்.
டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.100, ரூ.110, ரூ.120
- சா.இலாகுபாரதி















