24 March 2011

ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா!

Posted by Gunalan Lavanyan 11:01 PM, under | 2 comments


வியாழன் அன்று நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை போட்டியிலிருந்தே இந்தியா வீட்டுக்கு அனுப்பியி ருக்கிறது.



கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அசைக்கமுடியாத அணியாக இருந்துவந்த ஆஸ்திரேலியா பல முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு காணப்பட்டது. அது இந்த 2011 உலகக் கோப்பையிலும் பிரதிபலித்தது.

தோனி தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் நடந்த காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டியிலிருந்தே ஆஸ்திரேலியாவை வெளியேற்றியிருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குள் நுழையாமல், ஆஸ்திரேலியா வெளியேறியது இதுவே முதல் முறை.

இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 57 ரன்னும், டெண்டுல்கர் 53 ரன்னும், கம்பீர் 50 ரன்னும், ரெய்னா 34 ரன்னும் எடுத்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அதேபோல இந்தப் போட்டியில் ஜாக்கிர் கான், அஸ்வின், யுவராஜ் மூவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் ரன் அதிகரிப்பை கட்டுப்படுத்தினர்.

போட்டியின் ஒருகட்டத்தில் தோனி பெவிலியன் திரும்பிய பிறகு இந்தியா வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது யுவாராஜுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா பிரட்லீயின் பந்துகளை பவுண்ட்ரிக்கு விரட்டியடித்தார். ஒருகட்டத்தில் யுவராஜ் பவுண்ட்ரிக்கு பந்தை விரட்டியபோது, ஃபீல்டிங்கில் இருந்த பிரட்லீ பந்தை தடுக்க முயன்றபோது வேகமாக வந்த பந்து, லீயின் புருவத்தை பதம் பார்த்துவிட்டது.

இதனால், பிரட்லீயின் புருவத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர், முதல் உதவி செய்துகொண்டு ஆக்ரோஷமாக வந்து பந்து வீசிய பிரட்லீயின் பந்தை ரெய்னா விளாசித் தள்ளினார். இதனால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் அரையிறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

தி.மு.கவை தோற்கடிக்கும் அ.தி.மு.க

Posted by Gunalan Lavanyan 10:34 PM, under | No comments

அதிமுக தேர்தல் அறிக்கை

தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தோற்கடிக்கும் அளவுக்கு அ.தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இருக்கிறது என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறது. அதை உறுதிபடுத்துவது மாதிரிதான் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் திமுகவின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா. காரணம் எந்த இடத்திலும் திமுகவுக்கு சளைத்தது அல்ல அதிமுக என்பதை நிரூபிப்பதற்குத்தான். அது தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது.

குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்து உயர்நிலைப் பள்ளி (11, 12) மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.




மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை, காலணி. 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

கேபிள் டி.வி., அரசே ஏற்று நடத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைவருக்கும் கேபிள் துறையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். தவிர அது இல்லாவிட்டால் இது என்று இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் என மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. 

அதேபோல, வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை, ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் மானியம், மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ.12 ஆயிரமாக உயர்வு, அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 6 மாத காலமாக உயர்வு, திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு, மேலும் 4 கிராம் தங்கம், 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரமைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்துக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத் தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும் எனவும் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.


திமுக தேர்தல் அறிக்கையில்...

ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்த கவர்ச்சி திட்டங்கள்:


ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி. பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி. 58 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம். அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத் தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர் களுக்கு இலவச லேப்டாப்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம். மதுரை, திருச்சியில் புதிதாக மனநல மருத்துவமனைகள். ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு. குடும்பத்தில் முதல் பட்டதாரி களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை. அரசு பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதமாக உயர்வு. கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இலவச சிகிச்சை. அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம். எல்லா மாவட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி.  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணம். முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்வு. கோவை மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டம். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி.  மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும். உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும். சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும். மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும். சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை. பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக் கப்படும்.  சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை. சென்னையிலிருந்து கோவைக்கு புல்லட் ரயில் அமைக்க நடவடிக்கை.

இந்த இரண்டு அறிக்கையில் எந்த அறிக்கை ஜெயிக்கப் போகிறது என்று மே 13 வரை காத்திருந்த பார்ப்போம்...

மஹாவீரரை போற்றுவோம்!

Posted by Gunalan Lavanyan 10:27 AM, under | No comments


இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார் வர்த்தமானர்.

ராஜ வாழ்க்கையையும், பிற செல்வங்களையும் இளமை யிலேயே துறந்தார். விருப்பு, வெறுப்புகளையும் வென்றதால்,  மஹாவீரர் என்று அழைக்கப்படுகிறார். ஜைன சமயக் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் செய்த  மஹாவீரர், நல்ல நம்பிக்கை, நல்ல அறிவாற்றல், நல்ல பண்புகள் ஒவ்வொரு வருக்கும் தேவை எனப் போதித்தார்.

"எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்தலாகாது; உண்மைகளை மட்டுமே பேச வேண்டும்; முறையற்ற வழியில் எந்தப் பொருளையும் ஏற்கலாகாது; அறநெறி நீங்கி இன்பம் நுகர்தல் ஆகாது; பொருளாசையை முற்றிலும் நீக்குதல் வேண்டும்'' என்று அறிவுறுத்திய மஹாவீரர் பிறந்த தினம் ஏப்ரல் 16.

மஹாவீரரை போற்றுவோம்!

17 March 2011

அழகர்சாமியின் குதிரை ஸ்டில்ஸ்

Posted by Gunalan Lavanyan 10:16 PM, under | No comments











வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய படங்களை இயக்கிய சுசீந்திரனின் மூன்றாவது படம், அழகர்சாமியின் குதிரை. அழகர்சாமியாக அப்புக்குட்டி நடித்துள்ளார். அவருடன் சரண்யா மோகன், அழகன் தமிழ்மணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

12 March 2011

ஜாப்பானில் ஏற்பட்ட சுனாமியின் நேரடிக் காட்சிகள்

Posted by Gunalan Lavanyan 12:20 AM, under | No comments

வீடியோ 1


வீடியோ 2



வீடியோ 3



வீடியோ 4



11 March 2011

சுகமான சுகப்பிரசவம்

Posted by Gunalan Lavanyan 11:32 PM, under | No comments

‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா ஆட்டோக்களின் முதுகிலும் பார்த்து இருப்பீர்கள். அதற்குக் காரணம், பெண் குழந்தை பெறுவதற்கான தகுதியை எட்டுவது இந்த 21 வயதில்தான் என்பது நாம் அறிந்ததே! ‘‘அதேபோல, 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதும் சில நேரங்களில் ஆபத்தை விளை விக்கலாம். எனவே, சுகப்பிரசவத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உணவு முறைகளும் நிறைய இருக் கின்றன’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, பிரபல மகளிர் நோய் மருத்துவர் கே.பாலகுமாரி.

தாய்மையின் வயது

‘ ‘ ஒரு பெண், தாய்மை அடைவதற்கான சரியான பருவம் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள்தான். 21 வயதுக்கு முன்போ அல்லது 35 வயதுக்குப் பின்போ தாய்மை அடைவதால், பிறக்கப்போகிற குழந்தையும் சரி,  தாய்மை அடைகிற பெண்ணும் சரி பல சிக்கல்களையும், நோய்களையும் சந்திப்பதற்கான ஆபத்து அதிகம். இருபத்தியோரு வயதுக்குப்பின் குழந்தை பெறுவதால், பிறக்கும் சிசுவுக்கு நோய்த் தாக்குதல்கள் குறைவு. அதனால், சிசுவியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். சில நேரங்களில் இப்படி மருத்துவ விதியை மீறி குழந்தை பெறும்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருந்திருக் கிறார்கள்.

ஆனால், இது விதிவிலக்கு மட்டுமே. எல்லோருக்கும் இப்படி நேரும் என்று சொல்லமுடியாது. அதனால்தான், அரசாங்கமே பெண்ணின் திருமண வயதை வரையறுத்திருக்கிறது. எதனால் வயது வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பருவத்தில்தான் ஒரு பெண், தாம்பத்திய வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைகிறாள். அப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும்போது கரு முட்டைகளும் வீரியத்தோடு வளர்ச்சியடைந் திருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியில்தான் குழந்தையின் ஆரோக்கியமே அடங்கியிருக்கிறது. அதேபோல பிரசவமும் நார்மலாக இருக்கும். சிசேரி யனைத் தவிர்க்கமுடியும். குழந்தையை வளர்ப்பதற்கு தாய் நல்ல சக்தியோடு திடகாத்திரமாக இருப்பாள்.

சராசரியாக 21 வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தை, வளர்ந்து அதே 21 வயது அடையும் போது, தன் வாழ்க்கையைத் தானே கவனித்துக் கொள்கிற பக்குவத்தை அடைந்துவிடும். அப்போது, தாய்க்கும் 42 வயது ஆகியி ருக்கும். அந்த நடுத்தர வயதிலேயே அவளும் தன் பிள்ளைக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால், தன்னுடைய வாழ்க்கைச் சுமையை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும். இளைய வயதில் ஓடியாடி வேலை பார்த்தது மாதிரி 50 வயதுக்குப் பிறகு அவளால் செயல்படமுடியாமல் போவதற் கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஒரு பெண் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அறிவியல் பூர்வமாக நல்லது என்றே சொல்வேன்.

கர்ப்பகால உணவு முறைகள்

அடுத்து, கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி பார்க்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும்போது, எடை அதிகமாக உள்ள பெண்கள் 5 முதல் 7 கிலோ வரை எடை கூடலாம். அதுவே ஒல்லியானவர்களாக இருந்தால், 12 முதல் 15 கிலோ வரைகூட எடை ஏறலாம். தவறில்லை. அதேநேரத்தில், முதல் 3 மாதங்களுக்கு எடை கூடவேண்டும் என்ற அவசியம் இல்லை. வாந்தி எடுப்பதால் சிலர் எடை குறைவார்கள்; அதுவும் தவறில்லை. அடுத்து, 3-ல் இருந்து 5 மாதங்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை ஏறலாம். அதன்பிறகு, 5-ல் இருந்து 10 மாதங்களுக்கு 5 முதல் 7 கிலோவரை எடை கூடலாம். முதல் 5 மாதங்களுக்கு உணவு அளவை அதிகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது மாதத்துக்குப்பிறகு, 1 வேளைக்கு 300 கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது. உதாரணத்துக்கு 1 இட்லி, 1 வாழைப் பழம், 1 டம்ளர் பால். இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவை 300 கலோரி அளவுக்கு மாற்றியும் உட்கொள்ளலாம். சில பெண்கள், ‘குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறேன்’ என்று, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால், அதிக குண்டாகி சிசேரியன் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒல்லியாக இருப்பவர்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் உணவு விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். முதலில் நிறைய சாப்பிடக் கூடாது. கட்டாயம் சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க் க வேண்டும். சாதாரண மாக, எல்லாப் பெண்களும் எண்ணெய், சர்க்கரை, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். அதேமாதிரி கிழங்கு வகைகள், கொட்டைகள், மாமிசங்களையும் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை தேனில் நனைக்காமல் சாப்பிடலாம்.

ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’

- சா.இலாகுபாரதி

நம் தோழி, பிப்ரவரி 2011

09 March 2011

பெண்ணுரிமையைப் போற்றும் நாடு!

Posted by Gunalan Lavanyan 10:37 PM, under | No comments

படிப்பதற்காக நியூஸிலாந்துக்கு போனார் சென்னை தமிழ்ப் பொண்ணு புவனா. அங்கு போனபிறகு தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங் களையும் நியூஸிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற் றுமைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

08 March 2011

அனுஷ்கா + ப்ரியாமணி + நாகர்ஜூன் = வம்பு கூட்டணி!

Posted by Gunalan Lavanyan 11:35 PM, under | No comments

தெலுங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ரகடா படம் தமிழில் பெயர் வம்பு. இந்தப் படத்தில் அனுஷ்கா, ப்ரியாமணி, சார்மி என்று கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவில் சக்கைப் போடு போட்டுவரும் ரகடா தமிழ் ரசிகர்களையும் ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் பத்ர காளி பிலிம்ஸ் பிரசாத் ராவ், ஏ.வெங்கட்ராவ்.

'வம்பு' பட பாடல் காட்சிகளில் இருந்து சில படக் காட்சிகள்... கலக்கலான காதல் பாடல் வரிகளுடன்...



'சக்கைப் போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது'



'இச்சுத்தா இச்சுத்தா கண்ணத்துல இச்சுத்தா...'




'காதல் வைபோகமே...'



'ஆத்தாடி பாவட காத்தாட...'



'நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு...'



'கவிதை அரங்கேறும் நேரம்... மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்...'




'கட்டிப்புடி கட்டிப்புடிடா... கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா...'



'தொட்டால் பூ மலரும்... தொடாமல் நான் மலர்ந்தேன்...'


'அப்படி போடு... போடு... அசத்திப் போடு கண்ணாளே...'



'தொட்டுக்கவா... முட்டிக்கவா...'