கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்
கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்
24 March 2011
தி.மு.கவை தோற்கடிக்கும் அ.தி.மு.க
Posted by Gunalan Lavanyan
10:34 PM, under பாப்கார்ன் | No comments
அதிமுக தேர்தல் அறிக்கை
தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தோற்கடிக்கும் அளவுக்கு அ.தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இருக்கிறது என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறது. அதை உறுதிபடுத்துவது மாதிரிதான் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் திமுகவின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா. காரணம் எந்த இடத்திலும் திமுகவுக்கு சளைத்தது அல்ல அதிமுக என்பதை நிரூபிப்பதற்குத்தான். அது தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது.
குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்து உயர்நிலைப் பள்ளி (11, 12) மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை, காலணி. 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
கேபிள் டி.வி., அரசே ஏற்று நடத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைவருக்கும் கேபிள் துறையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். தவிர அது இல்லாவிட்டால் இது என்று இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் என மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
அதேபோல, வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை, ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் மானியம், மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ.12 ஆயிரமாக உயர்வு, அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 6 மாத காலமாக உயர்வு, திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு, மேலும் 4 கிராம் தங்கம், 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரமைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்துக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத் தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும் எனவும் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில்...
ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்த கவர்ச்சி திட்டங்கள்:
ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி. பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி. 58 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம். அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத் தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர் களுக்கு இலவச லேப்டாப்.
கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம். மதுரை, திருச்சியில் புதிதாக மனநல மருத்துவமனைகள். ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு. குடும்பத்தில் முதல் பட்டதாரி களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை. அரசு பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதமாக உயர்வு. கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இலவச சிகிச்சை. அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம். எல்லா மாவட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணம். முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்வு. கோவை மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டம். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.
சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி. மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும். உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும். சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும். மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும். சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை. பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக் கப்படும். சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை. சென்னையிலிருந்து கோவைக்கு புல்லட் ரயில் அமைக்க நடவடிக்கை.
இந்த இரண்டு அறிக்கையில் எந்த அறிக்கை ஜெயிக்கப் போகிறது என்று மே 13 வரை காத்திருந்த பார்ப்போம்...
மஹாவீரரை போற்றுவோம்!
Posted by Gunalan Lavanyan
10:27 AM, under பாப்கார்ன் | No comments
இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார் வர்த்தமானர்.
ராஜ வாழ்க்கையையும், பிற செல்வங்களையும் இளமை யிலேயே துறந்தார். விருப்பு, வெறுப்புகளையும் வென்றதால், மஹாவீரர் என்று அழைக்கப்படுகிறார். ஜைன சமயக் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் செய்த மஹாவீரர், நல்ல நம்பிக்கை, நல்ல அறிவாற்றல், நல்ல பண்புகள் ஒவ்வொரு வருக்கும் தேவை எனப் போதித்தார்.
"எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்தலாகாது; உண்மைகளை மட்டுமே பேச வேண்டும்; முறையற்ற வழியில் எந்தப் பொருளையும் ஏற்கலாகாது; அறநெறி நீங்கி இன்பம் நுகர்தல் ஆகாது; பொருளாசையை முற்றிலும் நீக்குதல் வேண்டும்'' என்று அறிவுறுத்திய மஹாவீரர் பிறந்த தினம் ஏப்ரல் 16.
மஹாவீரரை போற்றுவோம்!
17 March 2011
12 March 2011
ஜாப்பானில் ஏற்பட்ட சுனாமியின் நேரடிக் காட்சிகள்
Posted by Gunalan Lavanyan
12:20 AM, under வீடியோ | No comments
வீடியோ 1
வீடியோ 2
வீடியோ 3
வீடியோ 4
11 March 2011
சுகமான சுகப்பிரசவம்
Posted by Gunalan Lavanyan
11:32 PM, under ஹெல்த் | No comments
‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா ஆட்டோக்களின் முதுகிலும் பார்த்து இருப்பீர்கள். அதற்குக் காரணம், பெண் குழந்தை பெறுவதற்கான தகுதியை எட்டுவது இந்த 21 வயதில்தான் என்பது நாம் அறிந்ததே! ‘‘அதேபோல, 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதும் சில நேரங்களில் ஆபத்தை விளை விக்கலாம். எனவே, சுகப்பிரசவத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உணவு முறைகளும் நிறைய இருக் கின்றன’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, பிரபல மகளிர் நோய் மருத்துவர் கே.பாலகுமாரி.
தாய்மையின் வயது
‘ ‘ ஒரு பெண், தாய்மை அடைவதற்கான சரியான பருவம் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள்தான். 21 வயதுக்கு முன்போ அல்லது 35 வயதுக்குப் பின்போ தாய்மை அடைவதால், பிறக்கப்போகிற குழந்தையும் சரி, தாய்மை அடைகிற பெண்ணும் சரி பல சிக்கல்களையும், நோய்களையும் சந்திப்பதற்கான ஆபத்து அதிகம். இருபத்தியோரு வயதுக்குப்பின் குழந்தை பெறுவதால், பிறக்கும் சிசுவுக்கு நோய்த் தாக்குதல்கள் குறைவு. அதனால், சிசுவியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். சில நேரங்களில் இப்படி மருத்துவ விதியை மீறி குழந்தை பெறும்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருந்திருக் கிறார்கள்.
ஆனால், இது விதிவிலக்கு மட்டுமே. எல்லோருக்கும் இப்படி நேரும் என்று சொல்லமுடியாது. அதனால்தான், அரசாங்கமே பெண்ணின் திருமண வயதை வரையறுத்திருக்கிறது. எதனால் வயது வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பருவத்தில்தான் ஒரு பெண், தாம்பத்திய வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைகிறாள். அப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும்போது கரு முட்டைகளும் வீரியத்தோடு வளர்ச்சியடைந் திருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியில்தான் குழந்தையின் ஆரோக்கியமே அடங்கியிருக்கிறது. அதேபோல பிரசவமும் நார்மலாக இருக்கும். சிசேரி யனைத் தவிர்க்கமுடியும். குழந்தையை வளர்ப்பதற்கு தாய் நல்ல சக்தியோடு திடகாத்திரமாக இருப்பாள்.
சராசரியாக 21 வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தை, வளர்ந்து அதே 21 வயது அடையும் போது, தன் வாழ்க்கையைத் தானே கவனித்துக் கொள்கிற பக்குவத்தை அடைந்துவிடும். அப்போது, தாய்க்கும் 42 வயது ஆகியி ருக்கும். அந்த நடுத்தர வயதிலேயே அவளும் தன் பிள்ளைக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால், தன்னுடைய வாழ்க்கைச் சுமையை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும். இளைய வயதில் ஓடியாடி வேலை பார்த்தது மாதிரி 50 வயதுக்குப் பிறகு அவளால் செயல்படமுடியாமல் போவதற் கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஒரு பெண் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அறிவியல் பூர்வமாக நல்லது என்றே சொல்வேன்.
கர்ப்பகால உணவு முறைகள்
அடுத்து, கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி பார்க்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும்போது, எடை அதிகமாக உள்ள பெண்கள் 5 முதல் 7 கிலோ வரை எடை கூடலாம். அதுவே ஒல்லியானவர்களாக இருந்தால், 12 முதல் 15 கிலோ வரைகூட எடை ஏறலாம். தவறில்லை. அதேநேரத்தில், முதல் 3 மாதங்களுக்கு எடை கூடவேண்டும் என்ற அவசியம் இல்லை. வாந்தி எடுப்பதால் சிலர் எடை குறைவார்கள்; அதுவும் தவறில்லை. அடுத்து, 3-ல் இருந்து 5 மாதங்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை ஏறலாம். அதன்பிறகு, 5-ல் இருந்து 10 மாதங்களுக்கு 5 முதல் 7 கிலோவரை எடை கூடலாம். முதல் 5 மாதங்களுக்கு உணவு அளவை அதிகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது மாதத்துக்குப்பிறகு, 1 வேளைக்கு 300 கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது. உதாரணத்துக்கு 1 இட்லி, 1 வாழைப் பழம், 1 டம்ளர் பால். இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவை 300 கலோரி அளவுக்கு மாற்றியும் உட்கொள்ளலாம். சில பெண்கள், ‘குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறேன்’ என்று, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால், அதிக குண்டாகி சிசேரியன் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
ஒல்லியாக இருப்பவர்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் உணவு விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். முதலில் நிறைய சாப்பிடக் கூடாது. கட்டாயம் சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க் க வேண்டும். சாதாரண மாக, எல்லாப் பெண்களும் எண்ணெய், சர்க்கரை, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். அதேமாதிரி கிழங்கு வகைகள், கொட்டைகள், மாமிசங்களையும் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை தேனில் நனைக்காமல் சாப்பிடலாம்.
ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’
ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’
- சா.இலாகுபாரதி
நம் தோழி, பிப்ரவரி 2011
09 March 2011
பெண்ணுரிமையைப் போற்றும் நாடு!
Posted by Gunalan Lavanyan
10:37 PM, under பேட்டி | No comments
படிப்பதற்காக நியூஸிலாந்துக்கு போனார் சென்னை தமிழ்ப் பொண்ணு புவனா. அங்கு போனபிறகு தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங் களையும் நியூஸிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற் றுமைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.
08 March 2011
அனுஷ்கா + ப்ரியாமணி + நாகர்ஜூன் = வம்பு கூட்டணி!
Posted by Gunalan Lavanyan
11:35 PM, under கேலரி | No comments
தெலுங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ரகடா படம் தமிழில் பெயர் வம்பு. இந்தப் படத்தில் அனுஷ்கா, ப்ரியாமணி, சார்மி என்று கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவில் சக்கைப் போடு போட்டுவரும் ரகடா தமிழ் ரசிகர்களையும் ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் பத்ர காளி பிலிம்ஸ் பிரசாத் ராவ், ஏ.வெங்கட்ராவ்.
'வம்பு' பட பாடல் காட்சிகளில் இருந்து சில படக் காட்சிகள்... கலக்கலான காதல் பாடல் வரிகளுடன்...
'சக்கைப் போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது'
'இச்சுத்தா இச்சுத்தா கண்ணத்துல இச்சுத்தா...'
'காதல் வைபோகமே...'
'ஆத்தாடி பாவட காத்தாட...'
'நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு...'
'கவிதை அரங்கேறும் நேரம்... மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்...'
'கட்டிப்புடி கட்டிப்புடிடா... கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா...'
'தொட்டால் பூ மலரும்... தொடாமல் நான் மலர்ந்தேன்...'
'அப்படி போடு... போடு... அசத்திப் போடு கண்ணாளே...'
'தொட்டுக்கவா... முட்டிக்கவா...'
07 March 2011
தலைவர் ஜீவா மருமகளின் சேவை
Posted by Gunalan Lavanyan
11:18 PM, under பேட்டி | No comments
மாமா மாணவர்களுக்காக ஆசிரமம் நடத்தினார். மருமகள் முதியோர் களுக்காக ஆசிரமம் நடத்திவருகிறார். சென்னை, தாம்பரத்திலிருந்து முடிச்சூர் ரோடு வழியாகப் போனால் வருகிறது மண்ணிவாக்கம். இந்த ஊரில்தான், அமரர் ஜீவா நினைவு அறக்கட்டளையின் சரணாலயம் செயல்படுகிறது. நிர்க்கதியாக வருகிற முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, இந்த ஆசிரமத்தில் பாதுகாத்து வருகிறார், சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீவாவின் மருமகள் விஜயலட்சுமி மணிக்குமார்.
இவர் நடத்திவரும் அந்தச் சரணாலயத்துக்குச் சென்றபோது, அங்கு இருக்கும் முதியோர் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொண்டு இருந்தனர். நம்மைப் பார்த்ததும் மரியாதையோடு கையெடுத்துக் கும்பிட்டார்கள். ‘‘இவங்க எல்லாரையும் எங்க குடும்ப உறுப்பினர்கள் மாதிரிதான் கவனிச்சிக்கிறோம்’’ என்று சாந்தமான குரலில் சொன்னார் விஜயலட்சுமி.
ஆசிரமம் நடத்தவேண்டும் என்பது இவர் திட்டம் போட்டுச் செய்த காரியம் அல்ல. ஜீவா காங்கிரஸ் தொண்டனாக இருந்தபோது நாகர்கோயில் அருகே சிராவயலில் காந்தி ஆசிரமம் அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தந்தார். அந்த ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்தபோது ஜீவாவைப் பார்த்து, ‘நீ இந்தியாவின் சொத்து’ என்று பாராட்டினார். ஆனால் அந்த ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்த அவரால் முடியவில்லை.
‘‘ஆசிரமம் நடத்த வேண்டும் என்பது மாமாவுடைய கனவு. ஆனால் சிராவயல் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்த முடியலேங்கிற வருத்தம் அவருக்கு இருந்ததுன்னு கேள்விப்பட்டோம். அதனாலே, எங்க திருமண நாள், குழந்தைகளோட பிறந்த நாள்களில் ஆசிரமங்களுக்கு போய் அங்கே இருக்குற வங்களோடு இனிப்பு பலகாரங்களை பகிர்ந்துகிட்டு, மகிழ்ச்சியை வெளிப் படுத்திட்டு வருவோம். இதைப் பார்த்துட்டு அந்த ஆசிரமத்தை நடத்துறவங்க ளே, ‘உங்க மாமா ஜீவாவே ஆசிரமம் நடத்தின-வர்தானே, நீங்களே ஏன் ஆசிரமம் ஆரம்பிக்கக் கூடாது?’ன்னு கேட்டாங்க. ஆனா, நிதி ஆதாரம் இல்லாம எப்படி ஆரம்பிக்கிறதுங்கற கவலை எனக்கும் என் கணவருக்கும் வந்தது. இதை நண்பர்களிடம் சொன்னபோது, ‘அதுக்காகவா தயங்கறீங்க... நல்லது செய்ற துக்கு நீங்க இருக்கீங்க... உதவி செய்றதுக்கு நாங்க இருக்கோம்’னு சொன் னாங்க... மனசுக்கு நிறைவா இருந்தது.
2005இல் மாமா பெயர்லயே அறக்கட்டளையை ஆரம்பிச்சு ஆசிரமத்தை தொடங்கினோம். இடையிலே மேல்மருவத்தூர் பக்கத்-துலே இருக்கிற சோத்துப் பாக்கம் கிராமத்துலே அறக்கட்டளைக்காக ஒரு நிலம் வாங்கினோம். அந்த நிலத்-துலே விளையிற அரிசி, பயிர்களை ஆசிரமத்துக்காகப் பயன் படுத்திக்கறோம்.
அதேநேரத்துல, ஸ்டேட் பாங்க் பென்ஷனர்ஸ் அசோஸி யேஷன், கனரா பாங்க் எம்ப்ளாயீஸ் அசோஸியேஷன் எல்லா உதவியும் செய்றாங்க. இந்து மிஷன் ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கருணை உள்ளத்தோடு முதியோர்களுக்காக இலவச சிகிச்சை அளிக்கிறதுக்கு, தன்னோட ஹாஸ் பிடல்லே ஏற்பாடு செய்திருக்கிறார். அதனாலே, எந்த பிரச்னைன்னாலும் இந்து மிஷன் ஹாஸ்பிடல்லே முதியோர்களை அட்மிட் பண்ணுவோம்.
ஆனா, மருந்து மாத்திரை வாங்குறதுக்கு மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கு. அப்படி நிதி பற்றாக்குறை வர்ற நேரத்துலே நானும், என் கணவரும் எங்க சம்பள பணத்திலேருந்து எடுத்து செலவு செய்யறதுக்கு தயங்குனது இல்லை. ஆனா, எங்க ரிடயர்ட்மென்ட்டுக்குப் பிறகு இந்தமாதிரி செலவுகளை எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியலை.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துட்டே போறதாலே, நிதி பற்றாக்குறையை சமாளிக்க கஷ்டமா இருக்கு. சிலர் பெட்ஷீட், முதியோர்களுக்கான துணி மணின்னு உதவி செய்றாங்க. சிலர் தானே முன்வந்து அரிசி, பருப்புன்னு வாங்கி கொடுப்பாங்க. பரிபூர்ண சந்தோஷத்தோட அவங்க உதவுறதை பார்க்கும்போது ஆசிரமத்தை நடத்துறதுலே இருக்குற சிரமங்கள் பனி போல விலகிடும்.
சிரமங்கள் வரும்போது ஆதரவற்ற முதியோர்களோட வாழ்க்கையை நினைச்சு பார்ப்போம். அதோட ஒப்பிட்டா எங்க சிரமம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது. சிலர் பெத்தவங்களை பாத்துக்கக்கூட மனசு இல்லாமே இங்க வந்து விட்டுட்டு போயிடுவாங்க. காரணம் கேட்டா... ‘‘அப்பாவுக்கும் என் பொண்டாட்டிக்கும் ஆகமாட்டேங்குதுமா... எனக்கு அப்பாவை என்னோட வெச்சுக்கணும்னுதான் ஆசை. ஆனா, என் பொண்டாட்டியை நினைச்சா மனசு பதறுது. அவளை சமாதானப்படுத்தி அப்பாவை பாத்துக்கச் சொன்னா... ‘உன் அப்பன் சம்பாதிக் கும்போது பொண்ணுக்கு கொடுத்தான், இப்ப நிலைதப்பி போனபிறகு நான் கஞ்சி ஊத்தணுமா’’னு கேக்குறா... என்ன பண்றதுன்னே தெரியாத நேரத்துலே தான் இந்த அட்ரஸ் கிடைச்சது. அதுவும் எனக்கு சம்பளம் வேற குறைச்சலா இருக்கிறதாலே பணம் கட்டி அவரை முதியோர் இல்லத்துலே விடமுடியலே... அதனாலேதான் ஜீவா சரணாலயத்துலே இலவசமா விட்டுட்டு போறேன். அவரை பார்த்துக்கோங்கம்மா... பணம் கிடைக்கும்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துட்டு போறேம்மா’’ன்னு சொல்வாங்க.
மனசு துடிக்கிற மாதிரியான இந்தக் கதைகளை கேட்கும்போது, எங்களுக்கு ஒரே கேள்விதான் தோணும். ‘எங்களால பார்த்துக்க முடியலேன்னு பிள்ளை களை பெத்தவங்க கைவிட்டிருந்தா பிள்ளைகளோட கதி என்ன ஆகுறது..?’ மாமா இருந்திருந்தா, இப்படிப்பட்ட பிள்ளைகளை நினைச்சு என்ன பாடு பட்டிருப்பார்..? இந்த முதியோர் இல்லத்தை நடத்துறதுலே எங்களுக்கு பணத்துலேதான் சிரமமா இருக்கே தவிர, மனசுலே சிரமம் இல்லை. பிள்ளைகளும் இதை உணர்ந்தாங்கன்னா பெத்தவங்களை கைவிடுவாங் களா..?’’ விஜயலட்சுமியின் கேள்வி மனதைக் கனக்கச் செய்கிறது. இளைய தலைமுறை இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
- சா.இலாகுபாரதி,
படங்கள்: கமல்
நம் தோழி, பிப்ரவரி, 2011























