30 March 2011

நம் வழி தோனி வழி!

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 1 comment


பாகிஸ்தானும் இந்தியாவும் இன்று மோதிய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா மூன்றாவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது.







இந்திய வீரர்களின் சில மகிழ்ச்சித் தருணங்கள்...


இதற்குமுன் 1983இல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் இந்தியாவுக்கு கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார். அதேபோல கங்குலி தலைமையிலான அணியும் 2002இல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது.

ஆனால், நடைபெற்றுவரும் 2011 உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி காலிறுதியிலேயே ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து பழிதீர்த்துக்கொண்டது. இப்போது அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியதன் மூலம் வலுவான நிலையில் இலங்கை அணியை எதிர்கொள்ளப் போகிறது.

புதனன்று நடைபெற்ற அரையிறுப் போட்டியின் கதாநாயகனே எல்பிடபிள்யூதான்! இந்திய வீரர்களும் சரி, பாகிஸ்தான் வீரர்களும் சரி அதிக அளவில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்கள்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆனால், சச்சின் 85, சேவாக் 38, ரெய்னா 36, கம்பீர் 27 ரன்கள் எடுத்து அணி 260 ரன்கள் சேர்க்க உதவினர். இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். ஒருகட்டத்தில் அதோகதிதான் என்று இருந்தபோது, நெஹ்ராவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேபோல பந்துவீச்சில் யுவராஜ் சிங், முனாஃப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான் ஆகியோரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

நெஹ்ரா இன்று பந்துவீசப் போகிறார் என்று தெரிந்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தோனி தவறான முடிவு எடுத்திருக்கிறார் என்று பேசினார்கள். ஆனால், எப்போதும் தோனி பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் செய்து பார்க்கும்போது அது வெற்றியையே அதிகம் தந்திருக்கிறது. சில நேரங்களில் தோல்வி ஏற்படும்போது துவண்டுபோகாமல் எப்போதும் புதிய அனுகுமுறையும், புதிய முயற்சியும் செய்து பார்ப்பதில் தோனி வல்லவர். அதை இந்த முறையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லும் என்று நம்பிக்கையோடு இருப்போம்!

நம் வழி தோனி வழி!

28 March 2011

வெட்கத்தில் நெளிந்த அனுஷ்கா!

Posted by Gunalan Lavanyan 11:46 PM, under | No comments

தெலுங்கில் சக்கைப்போடு போட்ட வேதம் படத்தின் தமிழ் ரீமேக்கான ’வானம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக கவர்ச்சித் தாரகை அனுஷ்கா தாராளம் காட்டியிருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள். இரண்டுபேரும் காதல் காட்சிகளில் பின்னி யெடுப்பவர்கள். ஒருவர் சிம்பு. மற்றொருவர் பரத். வானம் படத்தில் அனுஷ்காவோடு சிம்பு நடித்தபிறகு அனுஷ்காவை புகந்து தள்ளுகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது அப்படி சிம்பு, அனுஷ்காவுக்கு புகழ்மாலை சூட்டியபோது அனுஷ் வெட்கத்தில் நெளிந்துவிட்டாராம். அரங்கத்தில் இருந்தவர்களுக்கு மூக்கில் வியர்க்காத குறைதான்! இருக்காதா பின்னே!





















வானம் படத்திலிருந்து சில காட்சிகள்...



ஆடியோ வெளியீட்டில் அனுஷ்கா!


26 March 2011

குள்ளநரிக் கூட்டம்

Posted by Gunalan Lavanyan 1:26 AM, under | No comments



இந்தப் படத்தில் வெண்ணிலா கபடிக்குழுவில் அறிமுகமான விஷ்ணுவும் - ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான மலையாள வரவு ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரனிடம் பணியாற்றிய ஸ்ரீபாலாஜிதான் படத்தின் இயக்குனர். அதனால், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் வெண்ணிலா கபடிக்குழு தொழில்நுட்பக் கலைஞர்களேகவே இருக்கிறார்கள்.























24 March 2011

ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா!

Posted by Gunalan Lavanyan 11:01 PM, under | 2 comments


வியாழன் அன்று நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை போட்டியிலிருந்தே இந்தியா வீட்டுக்கு அனுப்பியி ருக்கிறது.



கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அசைக்கமுடியாத அணியாக இருந்துவந்த ஆஸ்திரேலியா பல முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு காணப்பட்டது. அது இந்த 2011 உலகக் கோப்பையிலும் பிரதிபலித்தது.

தோனி தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் நடந்த காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டியிலிருந்தே ஆஸ்திரேலியாவை வெளியேற்றியிருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குள் நுழையாமல், ஆஸ்திரேலியா வெளியேறியது இதுவே முதல் முறை.

இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 57 ரன்னும், டெண்டுல்கர் 53 ரன்னும், கம்பீர் 50 ரன்னும், ரெய்னா 34 ரன்னும் எடுத்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அதேபோல இந்தப் போட்டியில் ஜாக்கிர் கான், அஸ்வின், யுவராஜ் மூவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் ரன் அதிகரிப்பை கட்டுப்படுத்தினர்.

போட்டியின் ஒருகட்டத்தில் தோனி பெவிலியன் திரும்பிய பிறகு இந்தியா வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது யுவாராஜுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா பிரட்லீயின் பந்துகளை பவுண்ட்ரிக்கு விரட்டியடித்தார். ஒருகட்டத்தில் யுவராஜ் பவுண்ட்ரிக்கு பந்தை விரட்டியபோது, ஃபீல்டிங்கில் இருந்த பிரட்லீ பந்தை தடுக்க முயன்றபோது வேகமாக வந்த பந்து, லீயின் புருவத்தை பதம் பார்த்துவிட்டது.

இதனால், பிரட்லீயின் புருவத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர், முதல் உதவி செய்துகொண்டு ஆக்ரோஷமாக வந்து பந்து வீசிய பிரட்லீயின் பந்தை ரெய்னா விளாசித் தள்ளினார். இதனால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் அரையிறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

தி.மு.கவை தோற்கடிக்கும் அ.தி.மு.க

Posted by Gunalan Lavanyan 10:34 PM, under | No comments

அதிமுக தேர்தல் அறிக்கை

தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தோற்கடிக்கும் அளவுக்கு அ.தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இருக்கிறது என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறது. அதை உறுதிபடுத்துவது மாதிரிதான் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் திமுகவின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா. காரணம் எந்த இடத்திலும் திமுகவுக்கு சளைத்தது அல்ல அதிமுக என்பதை நிரூபிப்பதற்குத்தான். அது தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது.

குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்து உயர்நிலைப் பள்ளி (11, 12) மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.




மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை, காலணி. 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

கேபிள் டி.வி., அரசே ஏற்று நடத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைவருக்கும் கேபிள் துறையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். தவிர அது இல்லாவிட்டால் இது என்று இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் என மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. 

அதேபோல, வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை, ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் மானியம், மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ.12 ஆயிரமாக உயர்வு, அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 6 மாத காலமாக உயர்வு, திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு, மேலும் 4 கிராம் தங்கம், 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரமைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்துக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத் தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும் எனவும் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.


திமுக தேர்தல் அறிக்கையில்...

ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்த கவர்ச்சி திட்டங்கள்:


ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி. பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி. 58 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம். அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத் தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர் களுக்கு இலவச லேப்டாப்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம். மதுரை, திருச்சியில் புதிதாக மனநல மருத்துவமனைகள். ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு. குடும்பத்தில் முதல் பட்டதாரி களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை. அரசு பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதமாக உயர்வு. கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இலவச சிகிச்சை. அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம். எல்லா மாவட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி.  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணம். முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்வு. கோவை மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டம். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி.  மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும். உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும். சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும். மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும். சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை. பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக் கப்படும்.  சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை. சென்னையிலிருந்து கோவைக்கு புல்லட் ரயில் அமைக்க நடவடிக்கை.

இந்த இரண்டு அறிக்கையில் எந்த அறிக்கை ஜெயிக்கப் போகிறது என்று மே 13 வரை காத்திருந்த பார்ப்போம்...